Sunday, December 30, 2018

பிறப்பு சூல் தந்த தாய்க்கு என் முதல் வணக்கம் தாயே, நீ இல்லையேல் இந்தப் பிறவியும் இல்லை பிறவாமை என்ற தெளிவும் இல்லை பிறந்ததனால் தானே பிறக்காததை அறிந்தேன்?!

கன்றின் பசியறிந்து சுரக்கும் தாய் மடிபோல் எந்தன் பசியறிந்து புகட்டினார் என் ஆசான்.

எப்படிச் சொல்வேன் என் விடுதலையை?? வரவில்லை என்றதனால் போக்கும் இல்லை என்றானதன்றோ??

அங்கும் முழுமை, இங்கும் முழுமை முழுமையிலிருந்து தோன்றியதனைத்தும் முழுமை முழுமை முதல், முழுமை கடை முழுமை மட்டுமே எங்கெங்கும் என்றானதால் விட்டு விடுதலையானேன்!!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home