Saturday, January 19, 2019

மனம்

மாசுகள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
மாசுகள் துடைத்தபின் உள்ளொளியாய்
சொல்லாத நுண்ணுணர்வாய்
சச்சிதானந்தமாய் அந்த சித்தாந்த முதலாய்
ஒளிரும் இறையறிய உனையல்லால்
வேறு துணை யார் எமக்கு??

ஆசைகள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
இறையறியும் ஆசை கூட
உன்னாலே தானே தெரிந்தது??

அசைவுகள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
அசைந்த பின் நீ கொள்ளும்
அசைவிலா நிலையே ஆனந்தம்
என்றறியார் யாரும்!!

மயக்கங்கள் நிறைந்ததென்று உன்னை ஊர் பழிக்கும்
மனமே! கவலை கொள்ளாதே
ஆசான் வந்து உன் மயக்கறுத்தால்
மாயை அழிந்து உன் சுயமறிவாயே

அறியாமை உறைவிடமாய், பின்
அறிவின் தெளிவிடமாய், இரண்டும் நீயானாய்
உன்னை என் சொல்லி வாழ்த்துவனே!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home