Saturday, January 19, 2019

ஆனந்தம்

எது கொண்டு அடைவேன் ஆனந்தம்? பொன்னும், பொருளும், மண்ணும் தருமோ? மனை தருமோ? பிள்ளை தான் தருமோ? எதுவும் தாராதே மானிடனே!!

மூக்கின் மேலிருக்கும் கண்ணாடி தேட மூவுலகும் சுற்றுவானேன்??

தூங்கும் பொழுது எது வைத்திருப்பாய்? எவ்விதம் படுக்கை என்பது கூட ஆழ்ந்த பின் அறியுமோ மனம்??
அருகில் யார் படுத்தாலும் அதனை அறியா மனமும் உறங்கி கிடக்கும் வேளையில்
உள்ளே உணர்ந்த உணர்வு ஒன்றே என்றும் அழியா அனந்தம்!!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home