பார்த்தேன்
அந்தியும் இரவும் சந்தித்த வேளை
தென்றல் மென்மையாய் வருடிச்செல்ல
ரயிலடி மேடையில் ஒற்றையில் தனிமையில்
சுற்றி மனிதர்கள் பற்பல மொழியில்
பற்பல குரல்கள், வேக நடைகள்
வித வித உடைகள், பைகள் அழைப்புகள்
இரைச்சலினூடே ஆழ்ந்த அமைதியில்
நானும், ஒருத்தியாய்….
வானம் பார்த்தேன், மேகம் அற்றதாய்
நீல வண்ணத்தின் ஊடு நிறமாய்
இளம் சிவப்புக்கோடுகள்
மாலைக்கதிரவன் விடைபெற
பதிவேட்டில் கையொப்பம்
இரவின் வருகைக்கு இயற்கை ஆயத்தம்
அத்தனை சத்தமும் என்னைச்சுற்றி
பார்த்தல் மட்டுமே செய்யும் நான்.
எல்லாம் புரியும், எல்லாம் அறிவேன்
ஒன்றும் செய்யாது பார்த்தபடியாய்
இப்படி இருத்தல் வாழ்க்கையில் சுகம் தான்.
சாத்தியமோவென்று எண்ணியிருந்தேன்
சாத்தியமற்றது சாத்திரம் உரைக்குமோ
சொன்ன குருநாதன் சொற்பொருள் உணர்த்த
எப்படி இருந்தாய் இவ்விடம் மட்டும்
எல்லாம் பார்த்தும் எதுவும் பாராது
புரத்தில் பாராது அகத்தில் பார்த்து
பார்ப்பன பார்க்க கற்றுத்தந்த
சாத்திரம் சொன்ன குருகழல் சரணே
அந்தியும் இரவும் சந்தித்த வேளை
தென்றல் மென்மையாய் வருடிச்செல்ல
ரயிலடி மேடையில் ஒற்றையில் தனிமையில்
சுற்றி மனிதர்கள் பற்பல மொழியில்
பற்பல குரல்கள், வேக நடைகள்
வித வித உடைகள், பைகள் அழைப்புகள்
இரைச்சலினூடே ஆழ்ந்த அமைதியில்
நானும், ஒருத்தியாய்….
வானம் பார்த்தேன், மேகம் அற்றதாய்
நீல வண்ணத்தின் ஊடு நிறமாய்
இளம் சிவப்புக்கோடுகள்
மாலைக்கதிரவன் விடைபெற
பதிவேட்டில் கையொப்பம்
இரவின் வருகைக்கு இயற்கை ஆயத்தம்
அத்தனை சத்தமும் என்னைச்சுற்றி
பார்த்தல் மட்டுமே செய்யும் நான்.
எல்லாம் புரியும், எல்லாம் அறிவேன்
ஒன்றும் செய்யாது பார்த்தபடியாய்
இப்படி இருத்தல் வாழ்க்கையில் சுகம் தான்.
சாத்தியமோவென்று எண்ணியிருந்தேன்
சாத்தியமற்றது சாத்திரம் உரைக்குமோ
சொன்ன குருநாதன் சொற்பொருள் உணர்த்த
எப்படி இருந்தாய் இவ்விடம் மட்டும்
எல்லாம் பார்த்தும் எதுவும் பாராது
புரத்தில் பாராது அகத்தில் பார்த்து
பார்ப்பன பார்க்க கற்றுத்தந்த
சாத்திரம் சொன்ன குருகழல் சரணே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home