மனிதர்கள் யாவரும் மிகவும் விரும்புவது எல்லொருக்கும் துக்க நிவாரணம், சுகம் அடைய வேண்டும் என்பதே. இந்த கருத்தை நாம் மகாகவி பாரதியார் பாடல் ஒன்றில் நன்றாகக் காணலாம்.
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி,
அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
தேவருந்தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில்,
எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே.
ஒவ்வொரு மனிதனும் நான்கு புருஷார்த்தங்களை அடைவதற்காகத்தான் பெரும்பாலான காரியங்களைச் செய்கின்றான். அந்த புருஷார்த்தங்களை நமது சாஸ்த்திரஙள் அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுகின்றன.
தன்னைக்கட்டுதல் என்பதே அறம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மனிதன், தனது உடல், மனம், சுற்றம் இவற்றை எப்படி வைத்திருக்கிறானோ அதைப்பொருத்தே அவனது வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும். சரியான அளவில் உடலுக்கு உணவு, மிதமான, வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி, அளவான தூக்கம், நிறைவான வேலை இவை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. இதை நமது குருநாதர் ஸ்நாமி பரமார்த்தானந்தர் Proper food, proper exercise, proper rest, proper occupation என்று கூறுவார்.
மனம் கட்டுப்பட நன்றாக த்யானம் பழக வேண்டும். புத்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தன்னைத்தான் காக்கின் சினம் காக்க என்றார் வள்ளுவர். உடல், மனம், பேச்சு இவை மூன்றும் கட்டுப்பாட்டில் இருத்தல் மிக அவசியம்.
பிறர் துயர் தீர்த்தல் என்பது, நம்மால் எவ்வளவு முடியுமோ தெரியாது ஆனால் நம்மால் நன்றாக பிரார்த்தனை செய்ய முடியும். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதி கூறியிருக்கிறார். நாம் ஈட்டும் பொருள் எல்லாம் பிறருக்கு கொடுத்து உதவும் பொருட்டே.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்கிறார் வள்ளுவர். இங்கு வேளாண்மை என்றால் பரோபகாரம் என்பதே பொருள். பொதுவாக வேளாண்மை செய்வதே மற்றவர்களுக்காகத் தான்.
அடுத்க்து பிறர் நலம் வேண்டுதல் என்றால், அடுத்தவருக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களின் மீது ஒருவன் பொறாமைப் படக்கூடாது. நம்மிடம் உள்ள தீய குணங்களிலேயே மிகவும் தீய குணம் பொறாமை தான். நமக்கு கெடுதல் நினத்தவர்களாகவே இருந்தாலும், அவர்களுக்கும் நல்லதே நினக்க வேண்டும்.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
என்று கேட்கிறார் வள்ளுவர்.
மற்றவர்கள் நலமுடன் இருக்க வேண்டுவதே மிகப்பெரிய இன்பமாகும்.
இறைவனை எப்பொழுதும் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே ஒவ்வுரு மனிதனுக்கும் வீடு பேறளிக்கும் சாதனை ஆகும். இறைவன் ஒரு பெயரோ, மத்கமோ சார்ந்திராமல், அனைத்து விதமான தெய்வங்களின் பெயர்களையும் வஞ்சனை இல்லாமல் இறைவன் யாவர்க்கும் பொதுவானவன், வேறுபாடற்றவன் என்பதை உணர்த்தும் விதமாக, அவ்வளவு தெய்வங்களின் பெயர்களையும் பாரதி குறிப்பிடுகிறார்.
तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् |
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते || 10||
பகவத் கீதை, பத்தாவது அத்யாயத்தில், பகவான் யார் என்னையே தனது இதயத்தில் இருத்தி சதா பூஜை செய்து என்னையே போற்றி வருகிரார்களோ, அவர்களுக்கு உண்மையை உணரும் அறிவைத்தந்து இந்தப்பிறவிக்கடலைக்கடக்கச்செய்வேன் என்கிறார்.
ஆக, இறைவனச் சார்ந்து இருப்பவன் வீடுபேறு அடைவான் என்பது திண்ணம்.
இந்த பூமியில் இன்னான்கே எவர்க்கும் கடமை எனப்படும் என்பதன் மூலம் எளிமையாக மனிதப் பிறவியின் குறிக்கோளை அடையும் வழியை பாரதியார் நமக்கு அருளியுள்ளார்.
அனைவரும், தன் நலமும் பேணி, பிறர் நலம் காத்து, பிறர் நலம் வேண்டிப் பிரார்த்தனை செய்து, இறைவனை உள்ளத்தில் எப்பொதும் இருத்தி இருப்பதே நமது கடமையாகக் கொள்வோம்.
பூஜ்யஸ்ரீ ச்வாமி ஒங்காரானந்த மஹஸ்வாமிகள் அருளுரை கேட்டு எழுதியது.
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி,
அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
தேவருந்தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில்,
எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே.
ஒவ்வொரு மனிதனும் நான்கு புருஷார்த்தங்களை அடைவதற்காகத்தான் பெரும்பாலான காரியங்களைச் செய்கின்றான். அந்த புருஷார்த்தங்களை நமது சாஸ்த்திரஙள் அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுகின்றன.
தன்னைக்கட்டுதல் என்பதே அறம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மனிதன், தனது உடல், மனம், சுற்றம் இவற்றை எப்படி வைத்திருக்கிறானோ அதைப்பொருத்தே அவனது வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும். சரியான அளவில் உடலுக்கு உணவு, மிதமான, வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சி, அளவான தூக்கம், நிறைவான வேலை இவை ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாதது. இதை நமது குருநாதர் ஸ்நாமி பரமார்த்தானந்தர் Proper food, proper exercise, proper rest, proper occupation என்று கூறுவார்.
மனம் கட்டுப்பட நன்றாக த்யானம் பழக வேண்டும். புத்தியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தன்னைத்தான் காக்கின் சினம் காக்க என்றார் வள்ளுவர். உடல், மனம், பேச்சு இவை மூன்றும் கட்டுப்பாட்டில் இருத்தல் மிக அவசியம்.
பிறர் துயர் தீர்த்தல் என்பது, நம்மால் எவ்வளவு முடியுமோ தெரியாது ஆனால் நம்மால் நன்றாக பிரார்த்தனை செய்ய முடியும். பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதி கூறியிருக்கிறார். நாம் ஈட்டும் பொருள் எல்லாம் பிறருக்கு கொடுத்து உதவும் பொருட்டே.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்கிறார் வள்ளுவர். இங்கு வேளாண்மை என்றால் பரோபகாரம் என்பதே பொருள். பொதுவாக வேளாண்மை செய்வதே மற்றவர்களுக்காகத் தான்.
அடுத்க்து பிறர் நலம் வேண்டுதல் என்றால், அடுத்தவருக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களின் மீது ஒருவன் பொறாமைப் படக்கூடாது. நம்மிடம் உள்ள தீய குணங்களிலேயே மிகவும் தீய குணம் பொறாமை தான். நமக்கு கெடுதல் நினத்தவர்களாகவே இருந்தாலும், அவர்களுக்கும் நல்லதே நினக்க வேண்டும்.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?
என்று கேட்கிறார் வள்ளுவர்.
மற்றவர்கள் நலமுடன் இருக்க வேண்டுவதே மிகப்பெரிய இன்பமாகும்.
இறைவனை எப்பொழுதும் சார்ந்து இருக்க வேண்டும் என்பதே ஒவ்வுரு மனிதனுக்கும் வீடு பேறளிக்கும் சாதனை ஆகும். இறைவன் ஒரு பெயரோ, மத்கமோ சார்ந்திராமல், அனைத்து விதமான தெய்வங்களின் பெயர்களையும் வஞ்சனை இல்லாமல் இறைவன் யாவர்க்கும் பொதுவானவன், வேறுபாடற்றவன் என்பதை உணர்த்தும் விதமாக, அவ்வளவு தெய்வங்களின் பெயர்களையும் பாரதி குறிப்பிடுகிறார்.
तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् |
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते || 10||
பகவத் கீதை, பத்தாவது அத்யாயத்தில், பகவான் யார் என்னையே தனது இதயத்தில் இருத்தி சதா பூஜை செய்து என்னையே போற்றி வருகிரார்களோ, அவர்களுக்கு உண்மையை உணரும் அறிவைத்தந்து இந்தப்பிறவிக்கடலைக்கடக்கச்செய்வேன் என்கிறார்.
ஆக, இறைவனச் சார்ந்து இருப்பவன் வீடுபேறு அடைவான் என்பது திண்ணம்.
இந்த பூமியில் இன்னான்கே எவர்க்கும் கடமை எனப்படும் என்பதன் மூலம் எளிமையாக மனிதப் பிறவியின் குறிக்கோளை அடையும் வழியை பாரதியார் நமக்கு அருளியுள்ளார்.
அனைவரும், தன் நலமும் பேணி, பிறர் நலம் காத்து, பிறர் நலம் வேண்டிப் பிரார்த்தனை செய்து, இறைவனை உள்ளத்தில் எப்பொதும் இருத்தி இருப்பதே நமது கடமையாகக் கொள்வோம்.
பூஜ்யஸ்ரீ ச்வாமி ஒங்காரானந்த மஹஸ்வாமிகள் அருளுரை கேட்டு எழுதியது.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home